tamilnadu

img

கொரோனா காலத்தில் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க சொல்லி நிர்பந்தம் ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் உள்ளிருப்புப் போராட்டம்

சேலம், ஆக.25 - கொரோனா காலத்தில் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் தொடர்ச்சியாக நிர்பந்தம் செய்வதை கண்டித்து ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் உள்ளி ருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொரோனா நோய்த்தொற்று பரவுவதைத் தடுக்க பல் ல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், நோய்ப் பரவலைக் கருத்தில் கொண்டு ஊரக வளர்ச்சித் துறையில் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வளர்ச்சித் துறை ஊழியர்களை உயர்  அதிகாரிகள் நிர்பந்தம் செய்யக்கூடாது. ஊழியர் களைப் பழிவாங்கும் எண்ணத்தோடு பிறப்பிக்கப்பட்ட மாவட்ட மாறுதல்களை உடனடியாக ரத்து செய்ய  வேண்டுமென வலியுறுத்தி சேலத்தில் ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடு பட்டனர்.

மேலும், சேலம் தாலுகா, தாரமங்கலம், உள் ளிட்ட அனைத்து வட்டார வளர்ச்சி அலுவல கங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

;