tamilnadu

img

தெருவிளக்கு வசதி கோரி மனு

இளம்பிள்ளை, ஆக. 19- இடங்கணசாலை பகுதியில் தெருவிளக்கு வசதி செய்து தரக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பேரூராட்சி செயல் அலுலரிடம் மனு அளித்தனர். சேலம் மாவட்டம், இடங்கணசாலை பேரூராட்சிக்குட் பட்ட  கே.கே.நகர் மேற்கு பகுதி முதல் இ.காட்டூர் அரசு பள்ளி வரை 100 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் தெருவிளக்கு இல்லாததால் இரவு நேரங்களில் விபத்துக்கள் ஏற்படுகின்றன. மேலும், தற்பொழுது மழைக்காலங்கள் என்பதால் விஷப்பூச்சிகள் அதிக அளவில் காணப்படுகின்றன.

 இதனால் அவ்வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் அச்சத் தில் உள்ளனர். இதனால், அப்பகுதியில் தெருவிளக்கு அமைத்துத் தரக்கோரி மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட் சியின் கே.கே.நகர் கிளை சார்பில் இடங்கணசாலை பேரூ ராட்சி செயல் அலுவலர் பாலகிருஷ்ணனிடம் மனு அளிக்கப்பட்டது. இதில், கே.கே.நகர் கட்சி கிளைச் செயலாளர் கார்த்திக், சங்ககிரி தாலுகா குழு உறுப்பினர் சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.