சேலம், அக். 20- சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே உள்ள தனியார் பள்ளி ஆசிரியர்களும், ஓட்டுனரும் பணம் திருடியதாக மாணவனை மிரட்டியதால் மாணவனுக்கு மனநலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே கல்பரப் பட்டி பகுதியை சேர்ந்தவர் செல்லமுத்து. விசைத்தறி தொழிலாளர் இவரின் மகன் ஆல்வின் ஸ்டீபன் (9). இவர் சித்தர் கோவில் அருகே புதுரோடு பகுதியில் உள்ள ஷாலோம் கான்வெண்ட் மெட்ரிக்குலேசன் தனி யார் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 10ஆம் தேதியன்று பள்ளிக்கு வேனில் சென்ற பொழுது பணத்தை திருடியதாக கூறி ஆசிரியர்களும், வாகன ஓட்டுநர்களும் மாணவனை 2 மணி நேரத் திற்கு மேலாக வாகனத்தில் வைத்து மிரட்டி துன்புறுத்தி உள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட மாணவனுக்கு கடுமை யான காய்ச்சல் ஏற்பட்டள்ளது. இதையடுத்து அவரின் பெற்றோர் உடனடியாக சேலம் அரசு மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்கு சேர்த்தனர். இதில் மாணவனுக்கு சிகிச்சை அளித்த மனநல மருத்துவர் கூறுகையில், உங்கள் குழந்தை கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளான். எனவே அதிர்ச்சியில் இருந்து மீண்டு வர சிகிச்சை அளிக்கப் பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பாதிக்கப்பட்ட மாண வரின் பெற்றோர் திங்களன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து, சம்மந்தப்பட்ட தனியார் பள்ளி நிர்வாகத் தினர் மீது பள்ளி கல்வித்துறை கடுமையான நடவ டிக்கை எடுக்கக்கோரி மனு அளித்தனர்.