tamilnadu

img

சேலம் உருக்காலையை தனியாருக்கு தாரைவார்க்கும் முடிவிற்கு எதிர்ப்பு ! 34ஆவது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டம்

சேலம் உருக்காலையை மத்திய மோடி அரசு தனியாருக்கு தாரைவார்க்கும் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் உருக்காலை தொழிலாளர்கள் 34ஆவது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சனியன்று நடைபெற்ற தொடர் காத்திருப்பு போராட்டத்தில் அதிமுகவின் வீரபாண்டி சட்டமன்ற உறுப்பினர் மனோன்மணி பங்கேற்று வாழ்த்தி பேசினார். மேலும் இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் மாநில செயலாளர் எஸ்.ராஜேந்திரன் உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.