சேலம், நவ.18- நவம்பர் 26 பொது வேலை நிறுத்தத்தையொட்டி சேலத்தில் 16 இடங்களில் மறியல் போராட்டத்தை நடத்து வது என அனைத்து தொழிற்சங்கம் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. சேலம் விபிசி நினைவகத்தில் அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் நவ.26 ல் நடைபெறும் நாடுதழுவிய வேலைநிறுத்தத்தை விளக்கி சிறப்பு கருத்த ரங்கம் நடைபெற்றது. தொமுச நிர்வாகி பழனியப்பன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.7,500 வழங்க வேண்டும். முறைசாரா நல வாரி யங்களை முறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் நவ.26-ஆம் தேதி நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது.அன்றைய தினம், சேலம் மாவட்டத்தில் 16 மையங்களில் மறியல் போராட் டம் நடத்துவது. முன்னதாக, நவம்பர் 20 ஆம் தேதி இக்கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கம் சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக, இக்கருத்தரங்கில் சிஐடியு மாவட்ட செய லாளர் டி. உதயகுமார், சாலை போக்குவரத்து மாநில துணைத் தலைவர் எஸ்.கே. தியாகராஜன், துணை செயலாளர் ஏ.கோவிந்தன், ஏஐடியுசி மாவட்ட செயலாளர் முனுசாமி, எச்எம்எஸ் நிர்வாகி கணேசன், ஏஐசிசிடியு நிர்வாகி நடராஜன், பிடிஎஸ் நிர்வாகி மனோகரன் உள் ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்களைச் சேர்ந்த திரளா னோர் கலந்து கொண்டனர்.