இளம்பிள்ளை, மே 17 - இளம்பிள்ளை அருகே குறைந்த விலை எனக்கூறி தரமற்ற அரிசி மூட்டைகளை விற்பனை செய்து சென்ற நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக் கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேலம் மாவட்டம், இளம்பிள்ளை மாரியம்மன் கோவில் திடலில் வெள்ளியன்று லாரிகள் மற்றும் ஆட் டோக்கள் மூலம் வியாபாரிகள் சிலர் குறைந்த விலையில் அரிசி மூட்டை களை விற்பனை செய்துள்ளனர். 25 கிலோ எடை கொண்ட அரிசி மூட்டை 800 ரூபாய்க்கு விற்கப் படும் தகவல் அருகிலுள்ள கிராமங் களுக்கும் பரவியதால் இதனைப் பெறுவதற்கு ஏராளமான மக்கள் அப் பகுதியில் திரண்டனர்.
இந்த அரிசி மூட்டைகளை வாங்கிச் சென்ற மக்கள் அதனை வீட்டில் சமைத்து சாப்பிட்ட நிலையில், அவை மிகவும் மோச மாக தரம் குறைவாக இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். கொரோனா வைரஸ் பரவலால் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கு அமலில் இருந்து வரும் சூழலில் மக்களை ஏமாற்றும் வித மாக தரமற்ற உணவுப்பொருட்களை விற்பனை செய்து வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்த வண்ணம் உள்ளது. இதுகுறித்து நடவ டிக்கை எடுக்க வேண்டிய உண வுப் பாதுகாப்பு அதிகாரிகள் கண் துடைப்பு ஆய்வு நடத்தி எவ்வித நட வடிக்கையும் எடுக்காமல் இருந்து வரு வதாகவும் கூறப்படுகிறது. ஆகவே, இத்தகைய மோசடியில் ஈடுபடும் நபர்கள் மீதும், அதற்கு உடந்தை யாக இருக்கும் அதிகாரிகள் மீதும் உயர் அதிகாரிகள் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.