இளம்பிள்ளை, ஜன. 26- சேலம் மாவட்டம், சங்ககிரியில் 10.வது தேசிய வாக்கா ளர் தின விழிப்புணர்வு பேரணி சனியன்று நடைபெற்றது. இதனை சங்ககிரி வட்டாட்சியர் பாலாஜி துவக்கிவைத் தார் இப்பேரணியானது சங்ககிரி வருவாய் கோட்டாட்சி யர் அலுவலகம் முன்பு தொடங்கி பழைய எடப்பாடி சாலை, சந்தைப்்பேட்டை, புதிய எடப்பாடி சாலை, பழைய பேருந்து நிலையம் ஆகிய முக்கிய சாலைகள் வழியாக ஊர்வலமாக சென்று வந்து மீண்டும் வருவாய் கோட்டச்சியர் அலுவல கத்தில் முடிவடைந்தது. இதில் தனியார் கல்லூரியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 200க்கும் மேற்பட்டோர் பங் கேற்று வாக்களிப்பதன் அவசியம் குறித்து பதாகைகளை கையில் ஏந்தியபடி ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.