tamilnadu

img

வரும் 12-ஆம் தேதி மேட்டூர் அணை திறப்பு....

சேலம் 
நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையால் காவிரியில் தொடர்ந்து தண்ணீர் வரத்து தினமும் அதிகரித்து கொண்டிருக்கிறது. நேற்று மேட்டூர் அணைக்கு 1740 கனஅடி நீர்வரத்து இருந்தது. இன்று 1451 கனஅடி நீர் வரத்து வருகை தந்துள்ள நிலையில், தற்போது குடிநீர் தேவைக்காக 1,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் 100.70 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், காவிரி டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடி நீர்ப்பாசன வசதிக்காக வரும் 12-ஆம் தேதி காலை 10 மணிக்கு தமிழக முதல்வர்  எடப்பாடி பழனிசாமி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுகிறார்.  

;