இளம்பிள்ளை, பிப்.13- குடிபோதையில் நண்பர்களை துப் பாக்கியால் சுட்டவர் வியாழனன்று கைது செய்யப்பட்டார். சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டி அருகே உள்ள பெரியசீரகாபாடி சேர்ந்தவர் முருகன் (40). இவர் சொந்தமாக விசைத்தறி ஜவுளி தொழில் புரிந்து வருகிறார். இங்கு அதே ஊரை சேர்ந்த வெங்கடாசலம் (40) மற்றும் அரூரைச் சேர்ந்த கணேசன் மகன் ரமேஷ் (30) ஆகியோர் விசைத்தறி தொழில் புரிந்து வருகின்றனர். இந்நிலையில் புதனன்று மாலை ரமேஷ் குடி போதையில் ஏர்கன் துப்பாக்கி எடுத்து, முருகன், வெங்கடாசலம் ஆகியோரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார். அப்போது அதிலிருந்த ஈய குண்டு முருகனின் தோள்பட்டையிலும், வெங்க டாசலம் காலிலும் பாய்ந்தன. வலி தாங்க முடியாமல் கதறிய இருவருரையும் சேலத் தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. இதுகுறித்து புகாரின் பேரில் ஆட்டை யாம்பட்டி எஸ்.ஐ. தேவிமரியசெல்வம் விசாரணை நடத்தி, ரமேஷை கைது செய்தார். மேலும், அவரிடம் இருந்த ஏர்கன் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. அரூரை சேர்ந்த ரமேஷிற்கு திரு மணமாகி மனைவியை விவாகரத்து செய்துவிட்ட நிலையில், பெரிய சீர காபாடியில் அவரது தாத்தா சுந்தரம் வீட்டில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறார். மதுப்பழக்கம் கொண்ட இவர் அதே பகுதியை சேர்ந்த இன்னொரு ரமேஷ் என்பவரிடம் குருவி சுடுவதற்கு என கூறி துப்பாக்கி வாங்கி வந்துள்ளார். ஆனால் அவர் நண்பர் களை விரட்ட பயன்படுத்திய போது அதிலிருந்து குண்டு வெளியாகியுள்ளது என போலீஸ் விசாரணையில் தெரிய வந்தனது. ஆகவே துப்பாக்கி வைத்து இருந்த மற்றொரு ரமேஷை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின் றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பர பரப்பு காணப்பட்டது.