tamilnadu

ஏற்காட்டில் கள்ள சாராயம் விற்றவர் கைது

ஏற்காடு, ஜூன் 16- ஏற்காட்டில் கள்ள சாராயம் விற்றவரை காவல் துறை யினர் கைது செய்தனர். சேலம் மாவட்டம், ஏற்காடு தாலுகா, மாரமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட குட்டமாத்திக்காடு கிராமத்தை சேர்ந்த வர் வெள்ளையன் மகன் சண்முகம் (30). கூலித் தொழி லாளி. இவர் கள்ளசாராயம் விற்பதாக ஏற்காடு காவல் துறை யினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து காவல் ஆய்வாளர் ரகு, காவலர்கள் சந்திரன், காண்டீபன், சீனி வாசன் ஆகியோர் குட்டமாத்திக்காடு கிராமத்தில் இருந்த சண்முகத்தை கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்து 3 லிட்டர் கள்ளசாராயத்தையும் கைப்பற்றினர்.

;