tamilnadu

பாலியல் பலாத்கார வழக்கில் கென்யா வாலிபருக்கு ஆயுள் தண்டனை

சேலம், ஏப். 3- பாலியல் பலாத்கார வழக்கில் கென்யா நாட்டு வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து சேலம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சேலம் மாநகரம் அம்மாபேட்டை காவல் சரகத்திற்குட்பட்ட பகுதியில் அமைந்த தனியார் கல்லூரியில் கென்யா நாட்டைச் சேர்ந்த பெண் பயின்று வந்தார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு தன்னுடன் படிக்கும் கென்ய நாட்டைச் சேர்ந்த எரிக் முலிங்கே நிதுளி என்பவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பான புகாரின் பேரில் அம்மாபேட்டை அனைத்து மகளிர் காவல்நிலைய நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து குற்றவாளி கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கு விசாரணை சேலம் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் குற்றம் நிரூபிக்கப்பட்டு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும் ரூ.17 ஆயிரத்து 500 அபராதமும் விதித்து புதனன்று தீர்ப்பளிக்கப்பட்டது.

;