tamilnadu

img

மகுடஞ்சாவடி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் முதல் கூட்டம் கண்துடைப்பு கூட்டமாக நடந்ததாக குற்றச்சாட்டு

 இளம்பிள்ளை, பிப்.8- மகுடஞ்சாவடி ஒன்றியக்குழு உறுப்பி னர்கள் முதல் கூட்டம், கண்துடைப்பு கூட்ட மாக நடந்து முடிந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  சேலம் மாவட்டம் சங்ககிரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட  மகுடஞ்சாவடி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில்   வெள்ளியன்று ஒன்றியக்குழு உறுப்பினர்கள் முதல் கூட்டம் ஒன்றியக்குழு தலைவர் எஸ்.லலிதா முன்னிலையில் நடைபெற்றது. இதில்  வட்டார வளர்ச்சி அலுவலர் எஸ்.வெங்க டேசன், ஒன்றிய குழு துணைத்தலைவர் என்.சரஸ்வதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் சங்ககிரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.இராஜா, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் பி.தேன்மொழி, எஸ்எஸ்ஆர்.பழனிசாமி மற்றும் மகுடஞ்சாவடி ஒன்றிய குழு 10 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மற்றும்  வாக்களித்த வாக்காளர்கள், தமிழக தேர்தல் அதிகாரிகள், அரசு ஊழியர் களுக்கு நன்றி கூறியும் மற்றும் ஒன்றிய அலுவலக நிர்வாக செலவினங்கள், உள்ளாட்சி தேர்தல் செலவுகள் மற்றும் சிசிடிவி கேமரா செலவுகள், கொசு மருந்து அடிக்கப்பட்ட செலவுகள் உள்பட்ட மொத்தம் 9 தீர்மானங்கள் நிறைவேற்றியும் கூட்டம் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் ஒன்றியக் குழு உறுப்பி னர்கள் தங்களது பகுதியில் உள்ள குறை களை தெரிவிக்க வாய்ப்பு வழங்கவில்லை. மேலும் குடிநீர், சாலை வசதி, தெருவிளக்கு,  சாக்கடை வசதி உள்ளிட்ட மக்களின் அடிப் படை பிரச்சனைகள் எதுவும் பேசாமல் சுமார்  45 நிமிடத்தில் கண்துடைப்பு கூட்டமாக நடந்து முடிந்தது என மன்ற உறுப்பினர்கள் வேதனையை தெரிவித்தனர் இக்கூட்டத்தில் உதவி பொறியாளர் துரைசாமி மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலர்களும்,ஒன்றிய குழு உறுப் பினர்கள்  கலந்து கொண்டு கொண்டனர்.