சேலம், நவ. 9- சாதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ள அனைத்து மக்களுக்கு சான்றிதழ் வழங்க வேண் டுமென வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியினர் கருமந்துறை வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், கல் ராயன்மலையில் வடக்கு நாடு, தெற்குநாடு, மேல் நாடு, கீழ்நாடு ஆகிய பகு திகளில் அதிகளவு மலை வாழ் மக்கள் வசித்து வரு கின்றனர். இப்பகுதி மக்கள் சாதிச் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்து, பல மாதங்கள் கடந்தும் அவர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்காமல் வரு வாய் துறையினர் மெத்தன போக்கை கடைபிடித்து வருகின்றனர். இந்நி லையில், வருவாய் துறையின் அலட்சியப் போக்கை கண்டித்தும், உடனடியாக மலைவாழ் மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கக் கோரியும் மார்க்சிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கருமந்துறை வருவாய் ஆய்வா ளர் அலுவலகம் முன்பு திங்களன்று கட்சியின் தாலுகா செயலாளர் பொன்னுசாமி தலைமையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.குணசேக ரன், வட்டச் செயலாளர் என். கிருஷ் ணமூர்த்தி, கல்வராயன் மலை வட்ட குழு உறுப்பினர்கள் வெங்கடேசன், தர்மலிங்கம், பொட்டி துரை, சின்ன மணி, பவளக்கொடி, பாக்யராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.