tamilnadu

அரசு பள்ளியில் அதிகரிக்கும் மாணவர் சேர்கை அடிப்படை வசதிகளை மேம்படுத்த கோரிக்கை

இளம்பிள்ளை, செப்.10- நடப்பு ஆண்டில் தனியார் பள்ளிகளை காட்டிலும் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகம் நடை பெறுவதால், பள்ளிகளின் கட்டமைப்பு மற்றும் அடிப் படை வசதிகளை மேம்படுத்த கோரிக்கைகள் எழுந் துள்ளன. சேலம் மாவட்டம், இளம்பிள்ளையில் அரசு ஆண் கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் ஆண்டுதோறும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்து பயின்று வருகின்ற னர். இந்நிலையில், நடப்பு கல்வியாண்டில் கூடுதலாக மாணவர் சேர்க்கை நடைபெறுவதாக ஆசிரியர்கள் மத் தியில் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மாணவர் சேர்க்கை அதிகப்படுத்த ஆசிரியர்கள் பேனர் வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவது மாணவர்கள் மற் றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற் றுள்ளது.  

அதேநேரம், தற்போது அதிகமாகும் மாணவர் சேர்க்கைக்கு தகுந்த அடிப்படை வசதிகளை ஏற்ப டுத்திட வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன. குறிப்பாக, மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப, ஆசிரி யர்களை கூடுதலாக நியமனம் செய்வது, கூடுதல் வகுப் பறைகள் கட்டுவது, அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்துவது போன்ற நடவடிக்கைகளில் அரசு கவ னம் செலுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.