tamilnadu

img

இளம்பிள்ளை பேரூராட்சியில் சாலை அமைக்கும் பணி பாதியில் நிறுத்தம் - மக்கள் கடும் அவதி

இளம்பிள்ளை, ஜன.1- இளம்பிள்ளை பேரூராட்சி 10ஆவது வார்டு பகுதியில் சாலை  அமைக்கும் பணி பாதியில் நிறுத்தப் பட்டதால் மக்கள் கடும் அவதிக்குள் ளாகி வருகின்றனர்.  சேலம் மாவட்டம், இளம்பிள்ளை பேரூராட்சிக்குட்பட்ட 10ஆவது வார்டு திருவள்ளுவர் நகர் பகுதியில் கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் பழுதடைந்த சாலையினை செப்பனிட இளம்பிள்ளை பேரூராட்சி நிர்வாகம் மூலம் டெண்டர் விடப்பட்டு பணிகள் துவங்கப்பட்டது. ஆனால் சாலை  அமைக்கும் பணிகள் பாதியில் நிறுத் தப்பட்டதால் அப்பகுதி பொதுமக்கள் சாலையில் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.  மேலும் இப்பகுதியில் உள்ள தனி யார் தொழிற்சாலை மற்றும் பள்ளி  வாகனங்கள் செல்வதற்கு மிகவும் சிர மப்பட்டு வருகிறார்கள். இச்சாலை யில் ஜல்லி கற்கள் மட்டும் கொட் டப்பட்டு கிடப்பதால் வாகனங்கள் செல்லும் பொழுது புழுதி கிளம்பி சுவாசக் கோளாறு ஏற்படுகிறது. மேலும் அப்பகுதியில் மக்கள் பல் வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே மாவட்ட நிர் பாதியில் நிறுத்தப்பட்ட சாலை  அமைக்கும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

;