இளம்பிள்ளை, மே 17- மகுடஞ்சாவடி வட்டா ரத்தில் சிறு, குறு விவசா யிகள் இலவசமாக நுண் ணீர்ப்பாசனம் பெற அழைப்பு விடுக்கப்பட்டுள் ளது. சேலம் மாவட்டம், மகு டஞ்சாவடியில் பயிர் சாகு படி பரப்பினை அதிகரிக் கவும், பாசன நீரினை சிக்கனமாக பயன்படுத் திடவும் வேளாண்மைத் துறையின் மூலம் சொட்டு நீர்ப்பாசனம், தெளிப்புநீர்ப் பாசன உபகரணங்கள் மற் றும் மழை தூவுவான் ஆகி யவை மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், சிறுகுறு விவ சாயிகளுக்கு 100 சதவீதம் முழு மானியமாக வழங்கப் படுகிறது. இது பெரு விவ சாயிகளுக்கு 75 சதவீதமாக மானியமாகவும் வழங்கப் படுகிறது. விவசாயிகள் இத் திட்டத்தின் கீழ் பயன்பெற உரிய ஆவணங்களோடு தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவல ரையோ அல்லது மகுடஞ் சாவடி வட்டார வேளாண்மை உதவி இயக் குநர் அலுவலகத்தை அணு குமாறு இயக்குனர் வி. மணிமேகலா தேவி தெரி வித்துள்ளார்.