சேலம்,அக்.30- ஆதிதிராவிட மக்களின் சுடு காட்டுப் பாதையை மறைத்து ஆதிக்க சாதியினர் அட்டூழியம் செய்து வருவதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரி வித்துள்ளது. சேலம் மாவட்டம், காடையாம் பட்டி தாலுகா பெத்தேல் காலனி டென்னிஸ் பேட்டை பகுதியில் ஆதிதிராவிட மக்கள் ஏராளமா னோர் வசித்து வருகின்றனர். சுமார் 42 ஆண்டுகளாக அப்பகுதி யில் அவர்கள் வசித்து வரும் நிலை யில், அப்பகுதியிலுள்ள சாதிய ஆதிக்க சக்தியினர் அம்மக்களுக்கு ஒதுக்கப்பட்ட சுடுகாட்டை இடத்தை தடுத்து வேலி அமைத் துள்ளனர். இதனால், இறந் தோரை புதைக்க பத்து கிலோ மீட்டர் நடந்து சென்று அடக்கம் செய்ய வேண்டிய சூழல் உருவாகி யுள்ளது. மேலும், அப்பகுதியில் சாலை போட பலமுறை ஒப்பந்தம் விடப்பட்டும், அப்பணிகளை மேற்கொள்ள விடாமல் ஆதிக்க சக்தினர் தடுத்து வந்துள்ளனர். இவர்களின் தொடர் ஆதிக்கத் தால் அம்மக்கள் கடும் அவதிக் குள்ளாகி வருகின்றனர்.
இதுதொடர்பாக, அதிகாரிகளி டம் பலமுறை மனு கொடுத்தும் எந்த அதிகாரியும் அவர்கள் மீது நட வடிக்கை எடுக்கவில்லை. இந் நிலையில், இது சம்பந்தமாக ஆதி திராவிட மக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை சந் தித்து விவரங்களை எடுத்துரைத் தனர். இதையடுத்து, சிபிஎம் மாவட்ட செயலாளர் பி.ராம மூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப் பினர் எம்.குணசேகரன், ஓமலூர் தாலுகா செயலாளர் பி.அரியாக்க வுண்டர், தாலுகா குழு உறுப்பி னர் சின்ராஜி, சிஐடியு சாலை போக்குவரத்து நிர்வாகிகள் கோவிந்தராஜ் உள்ளிட்டோர் பிரச்சனைக்குரிய இடத்தை பார்வையிட்டனர். இதன்பின், தீவட்டிப்பட்டி காவல்நிலையத் தில் புகார் மனு அளித்தனர். மேலும், மேற்கண்ட பகுதியை உடனடியாக மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரடி யாக பார்வையிட்டு ஆதிதிரா விட மக்களின் சாலை ஆக்கிர மிப்புகளை அகற்றி சாலை வச தியை ஏற்படுத்தித் தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.