tamilnadu

img

சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பறிமுதல்

இளம்பிள்ளை, பிப்.12- மகுடஞ்சாவடியில் திறந்த வெளியில் பாதுகாப்பில் லாமல் விற்பனை செய்து வந்த 18 சமையல் கேஸ் சிலிண்டர்கள் சங்ககிரி வட்டாட்சியர் பறிமுதல் செய்தார். சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே உள்ள மகுடஞ்சாவடி பகுதியில் சங்ககிரி வட்டாட்சியர் பாலாஜி  புதனன்று மகுடஞ்சாவடி பகுதியில் ஆய்வு மேற்கொண் டார். அப்போது மகுடஞ்சாவடி வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகம் அருகே பாதுகாப்பு இல்லாமல் 20-க்கும் மேற் பட்ட சமையல் கேஸ் சிலிண்டர்கள் விற்பனைக்கு வைக்கப் பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதை யடுத்த அவ்விடத்தில் எவ்வித பாதுகாப்பில்லாமல் திறந்த வெளியில்  சிலிண்டர் விற்பனை செய்யக்கூடாது என  கண்டித்ததுடன், இளம்பிள்ளை அருகே உள்ள நடுவனேரி  பகுதியில் இயங்கி வரும் அமுதா ஏஜென்சி உரிமை யாளரை நேரில் வந்து உரிய ஆவணங்களுடன் விளக்கம்  கொடுக்குமாறு வட்டார் கூறினார். பின்னர் பாதுகாப்பற்று வைக்கப்பட்டிருந்த 18 சமையல் கேஸ் சிலிண்டர், 7 காலி சிலிண்டர்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தார்.  இதனைத்தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறைக்கு சட்ட விரோதமாக விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதா என முழுமையான விசாரணை செய்ய பரிந்துரை செய்தார்.