சேலம், அக். 11- அரசு பழங்குடியினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடப்பு ஆண்டிற்கான இரண் டாம் கட்ட சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது. இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது, தமிழக அரசால் துவங் கப்பட்டுள்ள அரசு பழங்குடியினர் தொழிற் பயிற்சி நிலையம் கருமந்துறையில் 2020- ஆம் ஆண்டிற்கு இரண்டாம் கட்ட சேர்க் கைக்கான பதிவு நடைபெறுகிறது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மின்சார பணியாளர், கம்மியர் மோட்டார் வண்டி மற்றும் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர் களுக்கு குழாய் பொருத்துபவர் மற்றும் பற்றவைப்பவர் போன்ற பிரிவுகளில் சேர்ந்து பயில விண்ணப்பங்கள் அக். 12 ஆம் தேதி (இன்று) முதல் 14 ஆம் தேதி வரை இணையதளம் (www.skilltraining.tn.gov.in) மூலம் வரவேற்கப்படுகின்றன. மேலும், மாணவ, மாணவியர்களுக்கு மாதந்தோ றும் ரூ.500 உதவித்தொகை, விலையில்லா மடிக்கணிணி, மிதிவண்டி, சீருடையுடன் கூடிய தையற்கூலி, கட்டணமில்லா பேருந்து வசதி மற்றும் உணவுடன் கூடிய விடுதி வசதி ஆகிய சலுகைகள் வழங்கப் படும். கலந்தாய்வு மூலம் நடைபெறும் சேர்க் கைக்கான பதிவு அரசு தொழிற்பயிற்சி நிலைய உதவி மையம் மூலமாக பதிவு செய்து தரப்படும். மேலும் விவரங்களுக்கு முதல்வர், அரசு பழங்குடியினர் தொழிற் பயிற்சி நிலையம் கருமந்துறை அவர்களை நேரிலோ அல்லது 9443548359, 94438 23985, 9443457281, 9944754242, 99947 77678 ஆகிய தொலைபேசி எண்களின் வாயிலாகவோ தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என தெரிவித்துள்ளார்.