tamilnadu

img

மலர் கண்காட்சி ஏற்பாடுகளை ஆட்சியர் ஆய்வு

 சேலம், மார்ச் 7-  ஏற்காட்டில் நடைபெற உள்ள மலர் கண்காட்சி ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் ஆய்வு  செய்தார்.  சேலம் மாவட்டம், ஏற்காட்டில் கோடை காலங்க ளில், கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடை பெறும். இதற்காக ஏற்காடு அண்ணா பூங்கா மற்றும் ஜி.பி.ஜி–2 ஆகிய பூங்காக்களில் தோட்டக்கலைத் துறை சார்பில், மலர் செடி விதைகள் நடவு செய்யப் பட்டு, வளர்க்கப்பட்டு வருகிறது. இப்பணிகளை ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அண்ணா பூங்கா, சாலையோரம் தள்ளு வண்டிகளில் வியாபராம் செய்து வருபவர்ளை அங்கிருந்து காலி செய்து, புதிதாக கட்டியுள்ள கடை களை வழங்குமாறும், கடைகள் போதாத நிலையில், சந்தை வளாகத்தில் கடை நடத்த அனுமதிக்கமாறும் ஆட்சியர் பி.டி.ஓ. குணசேகரன் மற்றும் ஒன்றிய அதி காரிகளிடம் கூறினார். பின்னர், சேர்வராயன் கோவில் அருகில் உள்ள 478 ஏக்கர் பாக்ஸைட் மலைக்குன்றை மால்கோ நிறு வனத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டு, அதன் குத்தகை காலம் முடிவடைந்ததையொட்டி, அந்த இடத்தையும் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார். மேலும் அந்த இடத்தை வனத்துறைக்கு ஒதுக்கி, மரக்கன்றுகள் நட்டு வனம் உருவாக்குவதற்கான முயற்சிகள் மேற் கொள்வது குறித்து வட்டாட்சியரிடம் ஆலோசனை மேற்கொண்டார்.

;