இளம்பிள்ளை, மே 10 - இளம்பிள்ளை இடங் கணசாலை பேரூராட்சியில் குப்பை வண்டியில் தனிமனித இடைவெளியின்றி தூய்மைப் பணியாளர்களை அழைத்துச் செல்லும் அலுவலகத்திற்கு தீர்வு காண வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது. சேலம் மாவட்டம், இடங் கணசாலை பேரூராட்சியில் சுமார் 60 தூய்மைப் பணியா ளர்கள் உள்ளனர். தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள வேலையில் பேரூராட் சிக்குட்பட்ட கே.கே. நகர், ரெட்டியூர், இ. மேட்டுக்காடு மற்றும் காடையாம்பட்டி உள் ளிட்ட பகுதிகளில் இருந்து பணிக்கு வரும் பணியாளர் களுக்கு போதுமான போக்கு வரத்து வசதிசெய்து தரப்படவில்லை. இந்நிலையில் பேரூராட்சியில் பயன்படுத்தப்படும் குப்பை அள்ளும் சிறிய ஆட்டோவில் அவர்கள் அழைத்து வரப்பட்டு பணி முடிந்து, மாலையில் அதேபோல் கொண்டு சென்று விடப்படுகிறார்கள்.
இந்த பயணத்தின்போது போதிய தனிமனித இடைவெளியை பின்பற்ற முடியாததால் நோய் பரவக்கூடும் என்ற அச்சத்துடன் பணியாளர்கள் பணிக்கு சென்று வருகின்றனர். கொரோனா வை ரஸ் தாக்கம் தற்போது வேகமாக அதிகறீ த்து வரும் சூழலில் தங்களுக்கும் பாது காப்பு அளிக்கப்பட வேண்டும் என்பதே அவர்களின் வேண்டுகோளாக உள்ளது. மேலும், தூய்மைப் பணியாளர்களுக்கு மாலை அணிவிப்பதும், பாத பூஜை செய்வது என பல்வேறு இடங்களில் பொதுமக்கள் பாராட்டி வரும் நிலையில், அவர்களின் அடிப்படைத் தேவைகள் கூட அரசு நிர்வாகங்களால் இன்னும் தீர்க்க படாத அவல நிலை நீடித்து வருவது பல்வேறு தரப்பினரிடையே பெரும் அதிரு தியை ஏற்படுத்தியுள்ளது.