tamilnadu

இ பாஸ் இல்லாமல் வந்தவர்கள் மீது வழக்குப்பதிவு

இளம்பிள்ளை, ஆக.23 - வடமாநிலத்தில் இருந்து இபாஸ் இல்லாமல் சேலத் திற்கு வந்த புலம்பெயர்த் தொழிலாளர்கள் மற்றும் பேருந்து ஓட்டுநர் உள்ளிட்ட 52 பேர் மீது காவல்துறை யினர் வழக்குப்பதிவு செய்து பேருந்தைப் பறிமுதல் செய்த னர். சேலம் மாவட்டம், இளம் பிள்ளை அருகே தப்பக் குட்டை பகுதிக்கு தனியார் பேருந்து மூலம் பீகார் மாநி லத்திலிருந்து  புலம்பெயர் தொழிலாளர்கள் 52 பேர் வந்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையி னர், வருவாய் துறையினர் விசாரணை மேற்கொண்ட னர்.  இதில் 30 பேர் மட்டும் இ-பாஸ் மூலமாகவும், மீதி 22 பேர் இபாஸ் இல்லாமலும் வந்தது தெரியவந்தது. இதையடுத்து அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர். மேலும், இதுதொடர்பாக மகு டஞ்சாவடி காவல் நிலையத் தில் வழக்குப்பதிவு செய்யப் பட்டதோடு, அவர்களை அழைத்து வந்த பேருந்தும் பறிமுதல் செய்யப்பட்டது.

;