tamilnadu

img

காவல் நிலையத்தில்  டியூப்லைட்டை தின்ற கஞ்சா வியாபாரி!

சேலம் காவல்நிலையத்தில் டியூப்லைட்டை தின்ற கஞ்சா வியாபாரியால் பரபரப்பு ஏற்பட்டது. 
சேலம் அம்மாபேட்டை நாம மலை பகுதியை சேர்ந்த அருண்(30) என்பவரை கஞ்சா விற்பது தொடர்பாக அம்மாபேட்டை காவல்துறையினர்  விசாரித்ததில் அவர் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. காவல்துறையினர் அருணை கைது செய்தனர். இதையடுத்து சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு தயார் நிலையில் இருந்தபோது, குற்றம் சாட்டப்பட்ட அருண் கழிவறைக்கு சென்றதாக கூறப்படுகிறது. அப்போது திடீரென கழிவறையில் இருந்த டியூப் லைட்டை உடைத்து சாப்பிட்டு, கையில் குத்திக் காயம் ஏற்படுத்திக் கொண்டதாக கூறப்படுகிறது. 
இதையடுத்து காவல்துறையினர்  உடனடியாக அருணை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.