இளம்பிள்ளை, பிப்.20- சேலம் மாவட்டம், சீரகாபாடியில் உள்ள விநாயகா மிஷன் மருத்துவ கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு காவலன் செயலி (எஸ்ஓஎஸ்) குறித்த விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. விழிப்புணர்வு பயிற்சியில் சேலம் புற நகர் காவல் துணை கண்காணிப்பாளர் உமா சங்கர் கலந்து கொண்டு மாணவ, மாணவி களுக்கு தமிழ்நாடு காவல்துறை சார்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள காவலன் செயலி (எஸ்ஓஎஸ்) - குறித்து விளக்க உரையும், விழிப்புணர்வு குறித்தும் பயிற்சி யும் அளித்தார். மேலும் அவர் பேசுகையில், மாணவிகள், பெண்களும் இந்த காவலன் செயலியை தங்களது ஆண்ட்ராய்டு மொபைலில் பதிவிறக்கம் செய்து வைப்பது மிகவும் பாதுகாப்பானது. இந்த காவலன் செயலி 24 மணிநேரமும் செயல்படும் என தெரிவித்தார். இப்பயிற்சியில் விநாயகா மிஷன் மருத்துவ கல்லூரியின் மருத்துவ இயக்குனர் பிரகாஷ், மருத்துவ கண்காணிப்பாளர் கண்ணன், ஆட்டையாம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் குலசேகரன், மல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் அம்சவள்ளி, ஆட்டையாம்பட்டி காவல் நிலைய ஆய்வா ளர்கள் வெங்கடாசலம், தங்கவேல், தேவி மரியசெல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.