tamilnadu

img

இளம்பிள்ளையில் நூதன முறையில்  விழிப்புணர்வு

 

இளம்பிள்ளை, ஏப்.30-

கொரானா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில்  ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில் பொதுமக்கள்  யாரும்  வெளியே வரவேண்டாம் என அறிவிப்பு வெளியிட்டும் அரசு பல்வேறு விதிமுறைகளை விதித்தும் அதனை பின்பற்றாமல் பொதுமக்கள் இருந்து வருவதால் அரசு தரப்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இளம்பிள்ளை பகுதியில் முககவசம் அணியாமல் வெளியே நடமாடும் பொதுமக்களுக்கும், வாகனத்தில் செல்பவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சியர் உத்தரவுப்படி மகுடஞ்சாவடி காவல் துறை சார்பில் எமதர்மன் வேடமிட்டு மேளதாளத்துடன், முககவசம் இல்லாமல் வெளியே வரும் நபர்களுக்கு பாசக்கயிறை கழுத்தில் மாட்டி மாலை அணிவித்து  இலவசமாக முககவசம் வழங்கி போலீசார் நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிகழ்ச்சியில் மகுடஞ்சாவடி காவல் நிலைய ஆய்வாளர் சசிகுமார்,  உதவி ஆய்வாளர்கள் பெரியசாமி, சாந்தி மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

;