சேலம், ஆக. 29- பெண்களை இழிவாக பேசிய துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தியை கைது செய்ய வலியுறுத்தி சேலத்தில் வாலி பர் மற்றும் மாதர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, பெண்கள் குறித்து மிக இழிவாக பேசி யதை கண்டித்து தமிழகம் முழுவதும் மாதர் சங்கம், ஜனநாயக அமைப்புகள் மற்றும் முற்போக்கு அமைப்புகள் கண்டன போராட்டங்களை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட தலைவர் கந்தசாமி தலைமை யில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பெண்களை இழிவாக பேசிய துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தியை உடனடியாக கைது செய்ய வேண் டும். பெண்களை தரக்குறைவாக பேசும் இதுபோன்ற ஆணாதிக்க சிந் தனையாளர்களை கடுமையான குற் றப் பிரிவின் கீழ் தண்டிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஆவேச முழக்கங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஐ.ஞானசௌந் தரி, மாவட்ட துணைத்தலைவர் கே.ராஜாத்தி, வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் கணேசன், மாவட்ட பொரு ளாளர் வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.