சேலம், அக்.8- சேலம் அரசினர் மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பங்கள் வர வேற்கப்படுகிறது. இதுகுறித்து சேலம் அரசினர் மகளிர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் ஒய்.லீமா ரோஸ் தெரிவித்துள்ளதாவது, சேலம் அய்யந்திருமாளிகை ரோட்டில் இயங்கி வரும் அரசினர் மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அல்லது தவறிய மற்றும் பட்டம் பெற்ற மகளிரிடமிருந்து 2 ஆம் கட்ட கலந்தாய்வு சேர்க்கைக்காக விண்ணப்பங்கள் வர வேற்கப்படுகிறது. இங்கு, ஓராண்டு மற்றும் ஈராண்டு தொழிற்பிரிவுகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும், பட்டப்படிப்பு முடித்துள்ள நிலையில் கணனி மற்றும் தொழிற்கல்வி தகுதி பெற விரும்பும் மகளிர் மற்றும் இல்லத்தரசிகள் இப்பயிற்சியில் சேரலாம். இப்பயிற்சியில் சேர மகளிருக்கு வயது வரம்பு கிடையாது.
பயிற்சி கட்டணம் இல்லை. இலவச பஸ் பாஸ் வழங்கப்படும். ஓராண்டு பயிற்சிக்கு ரூ.185/-ம், ஈராண்டு பயிற்சிக்கு ரூ.195/- மட்டும் கட்டணமாக சேர்க்கையின்போது செலுத்த வேண்டும். இதில் காப்புத் தொகை ரூ.100/- பயிற்சி முடித்தவுடன் திரும்ப வழங்கப்படும். இதற்காக வருகின்ற அக்.12 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் விவரங்களை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், இதுதொடர் பான விபரங்களுக்கு மகளிர் தொழிற் பயிற்சி நிலைய முதல்வரை 0427-2403787, 70107-63305, 95006-22987 என்ற எண்க ளிலோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.