tamilnadu

img

உயர் மின்னழுத்த கோபுரத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கக்கோரி மனு

 சேலம்,டிச.11- உயர்மின்னழுத்த கோபுரத்தால் பாதிக் கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப் பீடு வழங்கக்கோரி சேலம் மாவட்ட ஆட்சி யரிடம் விவசாய சங்கத்தினர் மனு அளித்த னர்.  உயர்மின் அழுத்த கோபுரத்தால் பாதிக் கப்பட்ட தென்னங்கன்று மற்றும் பனை மரங்களுக்கு அரசு அறிவித்த இழப்பீட்டை விவசாயிகளுக்கு முழுமையாக வழங்க வேண்டும். இதர பயிர்களுக்கு கூடுதலான இழப்பீட்டை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி புதனன்று  சேலம் மாவட்ட ஆட்சியரிடமும்,  தோட்டக்க லைத்துறை அதிகாரிகளிடமும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மனு அளித்து முறையிட்டனர். இதில், விவசாயிகள் சங் கத்தின் சேலம் மாவட்ட செயலாளர் ஏ.ரா. மூர்த்தி, நாமக்கல் மாவட்ட செயலாளர்  பி.பெருமாள்  சங்ககிரி தாலுகா செயலாளர்  ராஜேந்திரன் மற்றும் பாதிக்கப்பட்ட  விவ சாயிகள் பலர் கலந்து கொண்டனர்.