சேலம், செப்.5 - இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தலைவர் மீது தாக்குதல் நடத்திய பள்ளப்பட்டி காவல் ஆய்வாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்ட த்தில் ஈடுபட்ட வாலிபர் சங்கத்தினரை காவல்துறையினர் கைது செய்தனர். சேலம் மாநகர பகுதியில் வசித்து வருபவர் முருகன். இவர் சொந்தமாக வெள்ளிப் பட்டறை நடத்தி வருகிறார். இப்பட்டறை யில் வெள்ளி கொள்ளை போனது. இதுகுறித்து புகார் அளிப்பதற்கு முருகன் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க வடக்கு மாநகர செயலாளர் ஆர்.வி.கதிர்வேல் ஆகியோர் கடந்த சனிக்கிழமை யன்று (ஆக.31) பள்ளப்பட்டி காவல் நிலை யத்திற்கு சென்றனர். அப்போது காவல் ஆய்வாளர் சாலை ராம் சக்திவேலிடம் புகார் மனு அளித்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கிருந்த காவல் உதவி ஆய்வாளர் அயூப்கான், காவல் ஆய்வாளரி டம் கதிர்வேலை காட்டி இவர் வாலிபர் சங்கத்தை சேர்ந்தவர் என்று கூறியுள்ளார். ஏற்கெனவே, காவல் ஆய்வாளரின் பல்வேறு மோசமான நடவடிக்கைகளுக்கு எதிராக வாலிபர் சங்கத்தினர் போராட்டம் நடத்தி வந்ததால் எரிச்சலடைந்த காவல் ஆய்வா ளர் சாலைராம் சக்திவேல், வாலிபர் சங்க நிர்வாகியான கதிர்வேலை வெளியே போகச் சொல்லி மிரட்டியுள்ளார். இதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்ததால் ஆத்திர மடைந்த காவல் ஆய்வாளர் சக்திவேல், கதிர்வேலை கடுமையாக தாக்கியுள்ளார். மேலும் செல்போனை பறித்துக்கொண்டு காவல் நிலையத்திலேயே கீழே உட்கார வைத்து தாக்கியுள்ளார். இத்தகவலறிந்த வாலிபர் சங்கத்தினர் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் காவல் நிலையம் முன்பு திரண்டு காவல் ஆய்வாளரின் அராஜகத்திற்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். அப்போது அங்கு வந்த மாநகர காவல்துறை மேற்கு சரக சட்டம்-ஒழுங்கு காவல் உதவி ஆணை யர் இப்பிரச்சனை குறித்து முறையான விசார ணை மேற்கொண்டு காவல் ஆய்வாளர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி யளித்தார். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் வாலிபர் சங்கம் சார்பில் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது. இதேபோல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழுவின் சார்பிலும் காவல் ஆணையரிடம் மனு அளித்து, சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வலியுறுத்தப்பட்டது. ஆனால் இதுவரை புகார் மனு மீது நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. காவல்துறையினரின் இத்தகைய போக்கை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் வியாழனன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் கந்தசாமி தலைமை வகித்தார். மாநில தலைவர் என்.ரெஜீஸ்குமார் கண்டன உரையாற்றினார். இதில் வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் கணேசன், பொரு ளாளர் வி.வெங்கடேஷ், மாவட்டக்குழு உறுப்பினர்கள் மற்றும் முன்னணி ஊழியர் கள் திரளாக பங்கேற்று காவல்துறை யினருக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.