சேலம், அக்.24 - சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் 19 ஆவது பட்ட மளிப்பு விழா வியாழனன்று பெரியார் கலையரங்கில் நடை பெற்றது. தமிழக ஆளுநரும், பல்கலைக்கழகத்தின் வேந்தருமான பன்வாரிலால் புரோகித் தலைமையில் நடைபெற்ற இவ் விழாவில் இணை வேந்தரும், உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வாழ்த்துரை வழங்கினார். உச்சநீதி மன்ற முன்னாள் தலைமை நீதிபதியும், முன்னாள் கேரள மாநில ஆளுநருமான நீதியரசர் சதாசிவம் பட்டமளிப்பு விழா உரையை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசுகையில், சேலம் பெரியார் பல்கலைக் கழகம் கடந்த இருபது ஆண்டு காலத்தில் தமது செயல்பாட்டால் நாட்டின் உயர் கல்வி அமைப்புகளிடமிருந்து பல்வேறு பெருமைகளை ஈட்டி உள்ளது. தர மதிப்பீட்டில் ஏ சான்றிதழ், தேசிய தர வரிசை பட்டியலில் 68 ஆவது இடத்தை பிடித்து சிறந்த உயர் கல்வி நிறுவனமாக திகழ்வதற்கு மகிழ்ச்சி என தெரி வித்தார். முன்னதாக, இந்த பட்டமளிப்பு விழாவில் 262 பேருக்கு முனைவர் பட்டமும், 95 பேருக்கு தங்கப்பதக்கமும் வழங் கப்பட்டது. மேலும், பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக் கப்பட்ட கல்லூரிகளை சேர்ந்த 44 ஆயிரத்து 497 மாணவ, மாணவியர்களுக்கும், பல்கலைக்கழக துறைகளிலிருந்து 1099 பேருக்கும், பெரியார் பல்கலைக்கழக தொலைதூர கல்வி இயக்கத்தின் துறையிலிருந்து 9831 உள்ளிட்ட 55 ஆயிரத்து 784 பேருக்கு பட்டம் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.