பிரபல செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் தனது 50-வது பிறந்த நாளை புதனன்று (டிசம்பர் 11) கொண்டாடுகிறார். அன்றைய நாளில் எழுத்தாளர் சூசன் நினனுடன் இணைந்து விஸ்வநாதன் ஆனந்த் எழுதியுள்ள “மைண்ட் மாஸ்டர்” என்கிற சுயசரிதை நூலை வெளியிடுகிறார். வெள்ளியன்று சென்னையில் இந்தப் புத்தகம் குறித்த உரையாடல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.