tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

தமிழகத்தில் தொழில் துவங்க முதலீட்டாளர்களுக்கு அழைப்பு
முதல்வர் ஸ்டாலின் ஆக. 27-இல் அமெரிக்கா பயணம்!

சென்னை, ஆக. 5 - தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், ஆகஸ்ட் 27-ஆம் தேதி அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொள்கிறார்.

இந்தப் பயணத்தின் போது, கூகுள் நிறு வன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை மற்றும் பல்வேறு தொழிலதிபர் களைச் சந்தித்து தொழில் முதலீடுகளை ஈர்க்க உள்ளார். அத்துடன் அமெரிக்கா வாழ் தமிழர்களைச் சந்திப்பதோடு அவர் களையும் தமிழ்நாட்டில் தொழில் தொடங்குமாறு அழைப்பு விடுக்க உள் ளார். அவருடன் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா மற்றும் அதிகாரிகள் உடன் செல்ல உள்ளனர். 

முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாட்டி ற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க இந்த மாதம் அமெரிக்கா செல்வதற்காக ஒன் றிய அரசிடம் அனுமதி கேட்கப்பட்டிருந் தது. அதற்கு ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சகமும் முறைப்படி அனுமதி வழங்கி விட்டது.

இதையடுத்து, 15 நாட்கள் அமெரிக்கா சென்று வரும் வகையில் முதலமைச்சரின் பயணத் திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது. பயணத்திட்ட விவரம் ஒன்றிய அரசிடம் அளிக்கப்பட்டு, இதைத்தொடர்ந்து அமெரிக்க தூதரகத்தில் விசா அனுமதி யும் வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகஸ்ட் 22 அன்று அமெரிக்கா செல்வார் என்று கூறப்பட்டது. ஆனால் இப்போது அவர், ஆகஸ்ட் 27 அன்று அமெரிக்கா புறப்படுவார் என தெரிய வந்துள்ளது.

உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி?
முதல்வர் விளக்கம்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது தொகுதியான சென்னை கொளத்தூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில், “சென்னையில் எங்கு தண்ணீர் தேங்கு கிறது என்று ஒரு இடத்தையாவது எதிர்க் கட்சிகள் காட்ட வேண்டும். பருவ மழைக்கு அனைத்து வகையான முன் னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுத்து வரு கிறோம். எப்பேற்பட்ட மழை வந்தாலும் எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது” என்றார்.

தொடர்ந்து, அமைச்சர் உதயநிதி ஸ்டா லினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கு வது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, “கோரிக்கை வலுத்துள்ளதே தவிர, பழுக்கவில்லை”; அதாவது காலம் கனியவில்லை’ என்று பதிலளித்துள்ளார்.