விடுதலைப் போராட்ட வீரர், சிபிஎம் மற்றும் சிஐடியுவின் மூத்த தலைவருமான தோழர் வி.பி.சிந்தன் நினைவு தினம் மே 8 அன்று அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் கே.கனகராஜ், என்.குணசேகரன், மாநிலக்குழு உறுப்பினர்கள் ஆர்.பத்ரி, வே.ராஜசேகரன், இரா.சிந்தன், இரா.சுதிர் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.