சென்னை, அக்.15- மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்நினைவாக, எம்.ஜி.ஆர்- ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அண்மையில்பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு எம்.ஜி.ஆர் குறித்து பல்திறன் போட்டிகளை நடத்தியது. இதில் உச்ச நீதிமன்ற மேனாள் நீதிபதி மற்றும் இந்திய சட்ட ஆணைய மேனாள் தலைவர் நீதியரசர் முனைவர் அரு. லெட்சு மணன் சிறப்பு விருந்தின ராகக் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்க ளுக்குப் பரிசுகளை வழங்கிச் சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்க ளைச் சேர்ந்த 1548 மாணவர்கள் கலந்து கொண்டனர். ஓவிய ப்போட்டி, பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, மௌன நடிப்புப் போட்டி என மூன்று பிரிவுகளாக இப்போட்டிகள் நடத்தப்பட்டன. ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற்றவர்களுக்கு முதல், இரண்டு, மூன்றாம் பரிசுகளும், பல ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டன இறுதியாக நடைபெற்ற பரிசளிப்பு விழா நிகழ்ச்சி யில் டாக்டர். எம்.ஜி.ஆர் – ஜானகி மகளிர் கல்லூரி யின் தலைவர் குமார் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். இக்கல்லூரியின் முதல்வர் முனைவர் ஆர். மணிமேகலை முன்னிலை வகித்தார். கல்லூரியின் டீன் முனைவர் அபிதா சபாபதி, தாளாளர் முனைவர். லதா ராஜேந்திரன் நன்றி கூறி னார்.