tamilnadu

img

இ-சேவை மையங்களில் மதிப்பெண் சான்றிதழ் பெறலாம்-பள்ளிக்கல்வித்துறை

 

தமிழகத்தில் உள்ள அரசு இ-சேவை மையங்களில் பள்ளி மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழ் மற்றும் மாற்றுச்சான்றிதழ் உள்ளிட்டவற்றைப் பெறலாம் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் செயல்படும் இ-சேவை மையங்கள் வாயிலாக மதிப்பெண் சான்றிதழ், பள்ளி மாற்றுச் சான்றிதழ் உள்ளிட்ட 23 ஆவணங்களை பொதுமக்கள் நேரடியாகப் பெற்றுக் கொள்ளலாம் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டு, தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், பள்ளி மாணவ, மாணவிகள் மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ் உள்ளிட்ட 23 ஆவணங்களை இ-சேவை மையங்கள் மூலம் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

;