tamilnadu

img

ரூ.477 கோடியில் முடிவுற்ற பணிகள்... முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்...

சென்னை:
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூ.477.42 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற பணிகளைத் தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.இதுகுறித்துத் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் வேலூர் மாவட்டம், வேலூர் மாநகராட்சிப் பகுதிகளுக்கு ரூ. 234 கோடியே 93 லட்சம் செலவில் குடிநீர் அபிவிருத்தித் திட்டம், திருச்சி மாவட்டம், முசிறி, தாத்தையங்கார்பேட்டை, துறையூர் மற்றும் உப்பிலியாபுரம் ஒன்றியங்களுக்குட் பட்ட 293 குடியிருப்புகளுக்கு ரூ. 140 கோடியே 22 லட்சத்தில் கூட்டுக் குடிநீர்த் திட்டம், கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரைப் பேரூராட்சி மற்றும் ஊத்தங்கரை ஒன்றியத்திற்குட்பட்ட 50 குடியிருப்புகளுக்கு 28 கோடியே 24 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்.நகராட்சி நிர்வாகத்தின் சார்பில், மதுரை மாநகராட்சியின் புதுமண்டபத்திலிருந்து 7 கோடியே 13 லட்சம் ரூபாயில் குன்னத்தூர் சத்திரத்திற்கு மாற்றி அமைக்கப்பட்ட கடைகள், திருமலை நாயக்கர் மஹாலில் 3 கோடியே 51 லட்சம் செலவில் கிரானைட் இருக்கைகள், புல்வெளிப் பரப்பு, கருங்கல் நடைபாதை உள்ளிட்ட வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட சுற்றுப்புறப் பூங்கா. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் புராதன வழித்தடத்தில் 14 கோடியே ரூ. 14 லட்சம் செலவில் அமைக்கப் பட்டுள்ள எல்.இ.டி. விளக்குகளுடன் கூடிய அலங்கார விளக்குகள், மாநகராட்சியின் பழைய நகரப் பகுதிகளில் ரூ. 30 கோடியே 25 லட்சம் மதிப்பீட்டில் மாற்றியமைக்கப்பட்ட எல்.இ.டி தெரு விளக்குகள் பல்வேறு மாட்டங்களில் மொத்தம் 477 கோடியே 42 லட்சம் ரூபாய் மதிப் பீட்டிலான முடிவுற்ற பணிகளைத் தமிழக முதல்வர் திறந்து வைத்தார்.

மகளிருக்கு விடுதிகள்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் கோவை, மயிலாடுதுறை, நெல்லை, விருதுநகர் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் ரூ. 10 கோடியே 4 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பணிபுரியும் மகளிர் விடுதி, ஆதிதிராவிடர் மாணவ, மாணவிகளுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் ஆகிய 8 கட்டிடங்களைத் திறந்து வைத்தார்.

காவல் துறை கட்டடங்கள்
உள்துறை சார்பில் 105 கோடியே 43 லட்சத்து 91 ஆயிரம் ரூபாய் மதிப் பீட்டில் கட்டப்பட்டுள்ள 359 காவலர் குடியிருப்புகள், 9 காவல் நிலையங்கள், 5 காவல்துறைக் கட்டடங்கள், 15 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையங்கள், 30 தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறைக் குடியிருப்புகள், 16 சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறைப் பணியாளர்களுக்கான குடியிருப்புகள் மற்றும் 2 சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறைக் கட்டடங்கள் ஆகியவற்றைத் திறந்து வைத்தார்.இந்த நிகழ்ச்சிகளில் அமைச்சர் கள் துரைமுருகன், கே.என்.நேரு, எஸ். இரகுபதி, ஆர்.காந்தி, என்.கயல்விழி செல்வராஜ், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு துறையின் உயர்அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

;