சென்னை, ஜூலை 10 - மாநகர போக்குவரத்துக் கழகத்தில் புகுத்தப்படும் 12 மணி நேர வேலை முறையை ரத்து செய்யக் கோரி போக்கு வரத்து ஊழியர்கள் செவ்வாயன்று (ஜூலை 9) பல்லவன் இல்லம் முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் செய்தனர். போக்குவரத்துக் கழக நிர்வாகம் தொழிலாளர்க ளுக்கு கொடுக்க வேண்டிய பஞ்சப்படி நிலுவை, ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு, கல்விக் கடன் போன்றவற்றை வழங்க மறுக்கிறது. வருங்கால வைப்பு நிதி யில் இருந்து மருத்துவம், கல்விக்கடன் உள்ளிட்டவை களை வழங்க மறுக்கிறது அல்லது குறைவாக வழங்கு கிறது. பணிக்கு வந்து பணியில்லாமல் திருப்பி அனுப்பப்படும் தொழி லாளர்களின் வருகையை விடுமுறையாக பதிவு செய்யப்படுகிறது. கடந்த 4 ஆண்டுகளாக ஓய்வு பெறுகிற தொழிலாளர்க ளுக்கு மாற்றாக புதிய ஊழியர்கள் நியமனம் செய்யப்படாமல் உள்ளனர்.
இந்நிலையில், கழகத்தில் புகுத்தப்படும் 12 மணி நேர வேலை என்பது மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிரானது. இதனால் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் வேலை இழப்பார்கள். எனவே, இதனை திரும்ப பெற வேண்டும், தொழில்நுட்ப பிரி வில் புதிய நியமனங்களை செய்ய வேண்டும், பணி ஓய்வு பெறும் தொழிலாளர்க ளுக்கு பணிக்கொடை, வருங்கால வைப்புநிதி, ஓய்வூதியம் ஒப்படைப்பு போன்றவற்றை வழங்க வேண்டும், தேனாம்பேட்டையில் உள்ள கடன் சங்கத்திற்கு பிடிக்கப்படும் தொகையை உடனுக்குடன் வழங்க வேண்டும். கேன்டீன் காண்ட்ராக்ட்டை ரத்து செய்துநிர்வாகமே நடத்த வேண்டும், ஒப்பந்தப்படி தையற்கூலியுடன் 4 சீருடை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது. அரசாங்கப் போக்கு வரத்து ஊழியர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற இப் போராட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் ஆர்.துரை தலைமை தாங்கினார். சிஐடியு தென்சென்னை மாவட்டச் செயலாளர் பா.பாலகிருஷ்ணன், பொதுச் செயலாளர் வி. தயானந்தம், பொருளாளர் ஏ.ஆர். பாலாஜி, துணைத் தலை வர் எஸ். பக்தவச்சலு, நிர்வாகிகள் ஆர். சுப்பிர மணி, டி. ஆறுமுகம், என். சிவா, கே. சுப்பிரமணி, எம். ரவிசங்கர் உள்ளிட்டோர் பேசினர்.