சிபிஎம் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் எஸ். கோபால் வலியுறுத்தல்
திருவள்ளூர், மே 18 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் எஸ் கோபால், மாவட்ட ஆட்சித் தலைவ ருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ள விவரம் வருமாறு. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வடமாநிலத் தொழிலாளர்களை அவர்க ளது சொந்த மாநிலத்திற்கு அனுப்பு வதற்காக மாவட்டத்தில் திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, ஆவடி ஆகிய மூன்று பகுதியில் இருந்து சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என்று ஏற்கெனவே மன அளிக்கப்பட்டுள்ளது. இதே கோரிக்கையை உள்ளடக்கி கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பி உள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்பாக வட மாநில தொழிலாளர்கள் கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை வழியாக நடந்தே செல்கின்றனர். எனவே, ஆவடியில் இருந்து சிறப்பு ரயில் இயக்குவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
மே 17 அன்று மீஞ்சூர் பகுதியில் உள்ள எல் அண்டு டி குடியிருப்பில் தங்கி இருந்த வட மாநில தொழிலாளர்க ளுக்கு, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சிறப்பு ரயில் ஏற்பாடு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப் பட்டது. அதன்படி சென்றவர்களை எண்ணூர் அருகே காவல்துறையினர் அவர்களை மடக்கி தடியடி நடத்தி யுள்ளனர். அந்த துறைமுகம் பகுதியில் மட்டும் பத்தாயிரத்துக்கும் மேற் பட்டோர் உள்ளனர். இவர்களுக்கென்று சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும். வடமாநில தொழிலாளர்கள் தங்கியுள்ள பகுதிகளில் முறையாக அவர்களுக்கு தகவல் தெரிவிப்பதற்கான ஏற்பாட்டை செய்ய வேண்டும்.
ஊரடங்கில் சில தளர்வுகள் செய் யப்பட்டு தொழிற்சாலையை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. கட்டுமானம், விவசாயம், சார்ந்த பணிகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பணிகளுக்கு செல்ல பொது போக்குவரத்து இல்லாத சூழ லில், இருசக்கர வாகனங்களை அதிகம் பயன்படுத்துகின்றனர். ஊரடங்கு காலத்தில் பிடிக்கப்பட்ட இரண்டு சக்கர வாகனங்களை உரியவர்களிடம் ஒப்ப டைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப் பட்டுள்ளது.