tamilnadu

மின் வேலியில் சிக்கி தொழிலாளி பலி

ஆம்பூர், ஜன. 2- திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த சின்னவரிகம் பகுதியில் விவசாய நிலத்தில் பயிர் பாதுகாப்புக்காக சுற்றிலும்  மின் வேலி அமைத்து, வனவிலங்குகளை உள்ளே வராமல்  தடுப்பதற்காக வைக்கப்பட்டி ருந்த மின்சார வேலியில் சிக்கி  சபாபதி (50) என்பவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்துள்ளார். இதுகுறித்து சபாபதியின் உறவினர்கள் பிரபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில் பிரபாத் காவலர்கள் நிலத்தின் உரிமையாளர்களான கோபாலகிருஷ்ணன் (45), வெங்கடேசன் (40) ஆகிய இருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

;