சிதம்பரம், மே 12- கடலூர் மாவட்டம் காட்டு மன்னார்கோயில் வட்டத் தில் மகளிர் சுய உதவிக்குழு வாங்கியுள்ள கடன்களை திரும்ப செலுத்துமாறு வலி யுறுத்தி விடியல் நிறுவனம், எல்என்டி, எக்விடாஸ், ஆர்.பி.எல். உள்ளிட்ட பல நிறு வனங்கள் கட்டாயப்படுத்தி வருகின்றன. கொரோனா தொற்று பரவாமல் தடுக்க அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் கடந்த 2 மாதமாக வாழ்வாதாரத்தை இழந்துள்ளதால், பணத்தை செலுத்த முடியவில்லை. இந்நிலையில் சுய நிதி நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்கள் தினசரி வந்து பணத்தை திரும்பச் செலுத்துமாறு கட்டாயப்படுத்துகின்றனர். இந்நிலையில் அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலாளர் தேன்மொழி, வட்டத் தலை வர் சுசிகலா, செயலாளர் ரேணுகா, பொருளாளர் புஷ்பா தலமையில் மகளிர் சுய உதவிக் குழுவினர் கடன்களை ரத்து செய்ய வலியுறுத்தி காட்டுமன்னார் கோவில் துணை வட்டாட்சி யரிடம் மனு அளித்தனர்.