tamilnadu

ஓசூரில் ரயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை

கிருஷ்ணகிரி, நவ .25- ஓசூர் ரயில் நிலையம் அருகில் உள்ள பாலம் அருகே திங்களன்று(நவ.25) அதிகாலை 4 மணிக்கு மயிலாடுதுறை மைசூர் விரைவு ரயிலில்  இளம் பெண் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொண்ட பெண் குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பெயர் சுவேதா என்பதும், வயது 25 என்பதும் அருகில் கிடந்த 10 மாத கைக்குழந்தை பெயர் சுருதி லஷ்மி என்பதும் கணவன் மூக்கண்டப்பள்ளியில் குடியிருக்கும் முரளி எனவும் தெரிய வந்துள்ளது. வீட்டில் கணவனுடன் ஏற்பட்ட சண்டையால் மன உளைச்சல் ஏற்பட்டதால்  சுவேதா ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். ரயிலில் பாய்வதற்கு முன் குழந்தை உயிர் வாழட்டும் என்று தரையில் வைத்து விட்டு ரயிலில் பாய்ந்துள்ளார். ரயில் செல்லும் போது சிதரிய கற்களால் குழந்தைக்கு சிறு காயம் ஏற்பட்டதால் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.