சென்னை:
புவி கண்காணிப்பு உட்பட 10 செயற்கைக்கோள் களுடன் பி.எஸ்.எல்.வி-சி49 ராக்கெட் நவம்பர் 7 சனிக்கிழமையன்று ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான்விண்வெளி ஆய்வு மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
நவீனரக இஓஎஸ்- 01 செயற்கைக்கோள் புவிகண்காணிப்பு, விவசாயம், பேரிடர் மேலாண்மை, காடுகள் கண்காணிப்பு ஆகிய பணிகளை துல்லியமாக மேற்கொள்ளும். இதனுடன் இணைந்து லிதுவேனியா நாட்டிற்கு சொந்தமான 1 செயற்கைகோளும், லக்சம்பெர்க்கிற்கு சொந்தமான 4, அமெரிக்காவிற்கு சொந்தமான 4 செயற்கைகோள்கள் என 9 வெளிநாட்டு செயற்கைகோள்கள் வணிகரீதியாக விண்ணில் ஏவப்பட்டது.கொரோனா பரவல் காரணமாக இந்த முறை பார்வையாளர்கள் ராக்கெட் ஏவுதலை பார்வையிட அனுமதிக்கப்படவில்லை. இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் ராக்கெட் ஏவுதல் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.