tamilnadu

img

பாடிபில்டிங்கில் தங்கப்பதக்கம் வென்ற ஐசிஎப் ஊழியர் பாஸ்கருக்கு பாராட்டு

சென்னை, செப். 5- ஐசிஎப்-ல் சீனியர் டெக்னீசியனாக பணி யாற்றும் எஸ்.பாஸ்கர் 25  ஆண்டுகளுக்கு மேலாக பாடி பில்டிங் விளையாட்டுப் பிரிவில் தொடர்ந்து விருது களை வென்று வருகிறார். 4 முறை மிஸ்டர் இந்தியா பட்டத்தை வென்றவர். தனது கடுமையான பயிற்சியாளும், விடாமுயற்சி யாலும் கடந்த ஆண்டில் (2018) மட்டும் தேசிய அளவில் தங்கப்பதக்கம், ஆசியளவில் தங்கப்பத க்கம், உலகளவில் தங்கப்பத க்கம் பெற்று சாதனை படைத்துள்ளார். உலகளவில் இந்தி யாவை பெருமைப்படுத்திய பாஸ்கரின் சாதனையை பாராட்டி மத்திய அரசு விளையாட்டு வீரர்க ளுக்கான புகழ்பெற்ற அர்ஜூனா விருதை குடியர சுத் தலைவர் வழங்கினார். ஐசிஎப் நிர்வாகத்திற்கும், தமிழகத்திற்கும் பாடிபில்டிங் பிரிவில் முதல் முறையாக அர்ஜூனா விருது பெற்று பாஸ்கர் பெருமை சேர்த்துள்ளார். ஐசிஎப் யுனைட்டெட் ஒர்க்கர்ஸ் யூனியன் சிஐடியு சார்பில் பாஸ்கருக்கு பாராட்டு விழா தலைவர் எஸ்.ராமலிங்கம் தலைமை யில் சென்னையில் வியாழ னன்று (செப். 5) நடை பெற்றது. இதில் செயல் தலை வர் வி.எம்.கிருஷ்ணகுமார், பொதுச் செயலாளர் பா.ராஜாராமன், பொரு ளாளர் வி.சுரேஷ், நிர்வாகி கள் என்.வெங்கட கிருஷ்ணாராவ், சி.சத்திய மூர்த்தி, சி.ரமேஷ்பாபு, ஜோஷி, சாண்டில்யன், கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.