கிருஷ்ணகிரி, ஜூன் 15- கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி வட்டம் சிவலிங்கா புரத்திலிருந்து கெம்பங்கிரி செல்லும் சாலையில் ஆல மரத்துப்பட்டியில் (குறைந்த உயரம் கொண்ட) மாற்றுத்திறனாளி பரந்தாமன் (27) குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் தம்பியும் இவரைப் போலவே மாற்றுத்திறனாளியாக உள்ளார். தந்தை பச்சையப்பன் 11 ஆண்டுகளாக மனநோயாளியாக உள்ளார். தாய் மாதம்மாள் சில ஆண்டு களுக்கு முன்பு சிறு விபத்தில் கால் முறிந்த நிலையில் சிரமப்பட்டு வரு கிறார்.
மாதம்மாள் கூலி வேலை செய்தே அண்ணன், தம்பி இரு வரையும் பட்டதாரிகளாக்கியுள்ளார். பரந்தாமன் "கலக்கப் போவது யாரு " டீவி நிகழ்ச்சியில் கூட பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், தற்போது 4 பேருமே மாற்றுத்திறனாளிகளாக உள்ளோம். பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளதால் எங்கள் குடும்பம் வாழ்வாதாரத்தை இழந்து அவதிப்பட்டு வருகிறது. எனவே தமிழக அரசு எங்கள் வாழ்வாதாரத்திற்கும், நிரந்த வருமானத்திற்கும் உதவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.