சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அம்பத்தூர் மண்டலம் 7வது வார்டு 85 இல் உள்ளது மங்களபுரம். இங்கு சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தலித் குடும்பங்கள் உள்ளன. இங்குள்ள கிராம சேவா சங்கம் 1947ல் துவக்கப்பட்டுள்ளது. இங்கு வசிக்கும் பெரும்பாலானோர் அருகில் உள்ள அம்பத்தூர் தொழிற்பேட்டை யில் வேலை செய்கின்றனர். இந்த குடி யிருப்பு பகுதிக்கு கழிவு நீர் இணைப்பு, குடிநீர், சாலை உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. கழிவு நீர் கால்வாய் அமைக்கப்பட்டும், முறையான கழிவுநீர் இணைப்பு இல்லாததால் அங்குள்ள மழைநீர் கால்வா யில் கழிவுநீர் கலக்கிறது. குடியிருப்பு களுக்கு ஏற்ற வகையில் மழைநீர் கால்வாய் இல்லாததால் அடைப்பு ஏற்பட்டு ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் கொசு உற்பத்தியாவதோடு, துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சிறுவர்க ளுக்கும், முதியோர்களுக்கும் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. குடிநீர் தொட்டிகள் அனைத்தும் கால்வாய் ஓராமே அமைக்கப்பட் டுள்ளன. முன் அறிவிப்பில்லாமல் தினசரி மின் தடை ஏற்படுகிறது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் இரவு நேரங்களில் அந்த பகுதி மக்கள் கடும் அவதிப்படுகின்றனர் இதுகுறித்து அங்கு வசிக்கும் சிவராமன் கூறுகையில், ‘எங்கள் தாத்தா காலத்தி லிருந்தே இங்கு வசித்து வருகிறோம். எங்க ளுக்கு சுத்தமான குடிநீர் இல்லை. கழிவு நீர் இணைப்பு இல்லை. அனைத்து சாலை களும் குறுகலான சாலைகள். சாலைகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. எங்கள் பகுதிக்கு கழிவுநீர், மெட்ரோ வாட்டர் இணைப்பு வழங்க வேண்டும்’ என்றார். சிபிஎம் பகுதிச் செயலாளர் சு.பால்சாமி,“ காலம் காலமாக தலித் மக்கள் வாழ்ந்து வரும் மங்களபுரம் பகுதியை மாநக ராட்சி நிர்வாகம் கண்டு கொள்வதில்லை. மக்களின் நீண்டகால கோரிக்கையான மழைநீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காணவில்லை என்றால் மக்களை திரட்டி மண்டல அலுவல கத்தை முற்றுகையிடுவோம்” என்றார். 100 ஆண்டுகளுக்கு மேலாக குடியி ருக்கும் இந்த கிராம மக்களுக்கு பட்டா கூட வழங்கவில்லை என்பது வேதனை யாகும். சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் அவல நிலை அப்படியே தொடர்கிறது. மாநகராட்சி நிர்வாகம் சிறப்புக் கவனம் செலுத்தி இந்த கிராம மக்களின் கோரிக்கையை கனிவுடன் நிறைவேற்றுமா? அரசு இந்த பகுதி மக்களுக்கு பட்டா கிடைக்க நடவடிக்கை எடுக்குமா? எஸ்.ராமு