சென்னை, பிப்.17- சிறப்பு கவனம் தேவைப் படும் குழந்தைகளை விரை வாகக் கண்டறிதல் மற்றும் சீராய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்' குறித்த சர்வதேச மாநாடு சென்னை யில் நடைபெற்றது. அமர் சேவா சங்கம் ஏற்பாடு செய்திருந்த இந்தக் மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோ ஹித் 2016-ஆம் ஆண்டு லான்செட் என்ற அமைப்பு வெளியிட்ட புள்ளி விவ ரப்படி, உலகம் முழுவதும் 5 வயதிற்குட்பட்ட மாற்றுத் திறனாளி குழந்தைகள் 5.3 கோடி பேர் உள்ள னர். இதில் 1.2 கோடி பேர் இந்தியாவில் வசிக்கின்றனர். தமிழகத்தில் மட்டும் சுமார் ஒரு லட்சம் குழந்தை கள் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. 2012-ஆம் ஆண்டு உலக சுகாதார நிறுவனம் வெளி யிட்ட அறிக்கையின்படி, குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே அவர்களது உடல் குறைபாடு சார்ந்த சிகிச்சை அளிக்காவிட்டால் வாழ்நாள் முழுவதும் ஏழ்மையிலும் தனிமையிலும் அவர்கள் சிரமப்பட வேண்டியிருக்கும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில் அமர் சேவா சங்கம் அமைப்பு மாற்றுத் திறனாளிகளுக்கு அவர்க ளது குறைகளை கண்டறிந்து அவர்கள் மேம்பட எல்லா வகையிலும் உதவி வருவது பாராட்டுக்குரியது என்றார். பாதிப்பு உள்ள சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளிடம், பிரச்னை இருப்பதை முன்னதாகக் கண்டறிந்து, மேலாண்மைப் பணிகளைத் தொடங்கினால், அவர்களை விரைவாக இயல்பு நிலைக்கு திருப்பி விடலாம் என்று கருத்த ரங்கில் பேசிய அமர் சேவா சங்க நிறுவனர் எஸ்.ராம கிருஷ்ணன் கூறினார்.