tamilnadu

img

சென்னையில் முகக்கவசம் அணிபவர்கள் அதிகரிப்பது ஏன்?

சென்னை, மே 28 - சென்னையில் காவல் துறையினரின் அபராத  வசூ லுக்கு பயந்து முகக்கவசம் அணிபவர்களின் எண் ணிக்கை அதிகரிக்க தொடங்  கியுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள் முகக்கவ சம் அணிவது கட்டாயமாக் கப்பட்டுள்ளது. ஆனால் 15  விழுக்காடு மக்கள் முகக்கவ சம் அணியாமல் வெளியில்  நடமாடுவதாக சென்னை கொரோனா தடுப்பு சிறப்பு  அதிகாரி ஜெ.ராதா கிருஷ்ணன் கூறியிருந்தார். இதன் தொடர்ச்சியாக கடந்த 22ந் தேதி முதல் முகக்  கவசம் அணியாமல் இரு சக்கர வாகனம், கார்களில் வருவோருக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என காவல்துறை அறி வித்தது. அதன்படி முதல் இரண்டு நாட்களில் மட்டும்  10 ஆயிரத்திற்கும் மேற்  பட்டோர் மீது வழக்குப் பதியப்பட்டு, அபராதமும் வசூலிக்கப்பட்டது. இந்த நிலையில் போலீசாரின் அபராத வசூ லுக்கு பயந்து வெளியில் வரும் பொதுமக்கள் பெரும்பாலானோர் முகக் கவசங்களை அணியத் தொடங்கியுள்ளனர்.  கடந்த 22-ந்தேதி தொடங்கியுள்ள அபராத வசூல் 7-வது நாளாக வியா ழனன்றும் (மே 28) நீடித்தது.  இதன்படி ஒரு கோடி ரூபாய் அளவுக்கு அபராதம் வசூலாகி இருக்கும் என்று  போக்குவரத்து காவல்  துறையினர் தெரிவிக்கின்ற னர்.