tamilnadu

கொரோனா தகவல்களில் முரண்பாடு ஏன்? அரசு, மாநகராட்சி சொல்வதில் எது உண்மை?

சென்னை, மே 26 - தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிடும் புள்ளி விவரங்களுக்கும், சென்னை மாநக ராட்சி அன்றாடம் வெளியிடும் தகவல்க ளுக்கும் இடையே முரண்பாடு நிலவுகிறது. தமிழக அரசு ஞாயிறன்று (மே 24) வெளியிட்ட விவரப்படி சென்னையில் குண மடைந்தவர்கள் எண்ணிக்கை 4 ஆயிரத்து 844பேர். ஆனால் மாநகராட்சி தனது டிவிட்டர் பக்கத்தில் 4 ஆயிரத்து 781 பேர் குண மடைந்துள்ளதாக பதிவிட்டுள்ளது. அதேபோன்று சிகிச்சை பெற்று வருவோ ரின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 653 பேர்  என்கிறது தமிழக அரசு. ஆனால் மாந கராட்சி 5 ஆயிரத்து 655 பேர் சிகிச்சை என்கிறது.  இறந்தவர்களின் விவரத்திலும் இந்த முரண்பாடு நீடிக்கிறது. தமிழக அரசு 78  பேர் இறந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள நிலை யில், மாநகராட்சி 77 பேர் என்கிறது. அரசு, மாநகராட்சி இரு அமைப்புகளும் சென்னையில் மொத்தம் பதிப்பு 10 ஆயி ரத்து 576 என்கின்றன.

ஆனால், தமிழக அரசின் புள்ளி விவரத்தின் கூட்டுத் தொகை  10 ஆயிரத்து 575 என்றும், மாநகராட்சி விவ ரங்களின் கூட்டுத்தொகை 10 ஆயிரத்து 513  என வருகிறது.  (அதாவது மொத்தம் பாதிக்கப்பட்டவர்களில் 52 பேர் ஒருதரப்பில் கூடுதலாகவும், ஒரு தரப்பில் குறைத்தும் காட்டப்பட்டுள்ளது) ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் பாதிக் கப்பட்டவர்கள் 16 ஆயிரத்து 277 பேர் என அரசு அறிவித்துள்ளது. ஆனால் பட்டிய லில் விவரங்களை கூட்டினால் 16 ஆயிரத்து 274  என்றே வருகிறது. சமூக ஆர்வலர்கள் கேள்வி? சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதி களில் மீண்டும் மீண்டும் கொரோனா தொற்று  அதிகரித்த வண்ணம் உள்ளன. அவ்வாறெ னில், கட்டுப்படுத்தப்பட்ட பகுதி என்ற திட்ட மிடல் தோல்வியடைந்து விட்டதா? கட்டுப்படுத்தப்பட்ட பகுதி அல்லாத இடங்களில் இருந்து மருத்துவமனைக்கு வரும் கர்பிணிகளுக்கும், நோயாளிகளுக்கும் தொற்று பரவுவது எவ்வாறு? மருத்து வர்கள், செவிலியர்களுக்கு தரமான முககவ சம், தற்பாதுகாப்பு ஆடை போன்றவை வழங் கப்படுவதாக அமைச்சர் தொடர்ந்துகூறி வருகிறார். அவ்வாறெனில் மருத்து வர்களும், செவிலியர்களும் தொடர்ந்து அதிக ளவில் பாதிக்கப்படுவது ஏன்? போன்ற கேள்வி களும் எழுகின்றன.  

ஐசிஎம்ஆர் அங்கீகரித்த தனியார் மருத்துவ  பரிசோதனை மையங்களில் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள அதிகளவில் மக்கள் செல்லத் தொடங்கி உள்ளனர். அங்கு பரிசோதனைக்கும், சிகிச்சைக்கும் வரைமுறையின்றி கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனை தடுக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? கொரோனா தொற்று குறைவாக பதி வான நாட்களில் கடுமையாக கடைபி டிக்கப்பட்ட ஊரடங்கு, நாளுக்குநாள் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிக ரித்துக் கொண்டே செல்லும் போது தளர்வு களை அறிவிப்பது ஏன்? பொதுஇடங்களில் மக்கள் கைகழுவ ஏற்பாடுகளை செய்யா மல் இருப்பது ஏன்? இவ்வாறு பல்வேறு கேள்விகளை சமூக ஆர்வலர்கள் எழுப்பி வருகின்றனர்.