tamilnadu

மதிய உணவு திட்டத்தில் ஏன் கேரளாவை பின்பற்றக் கூடாது? தயாநிதிமாறன் எம்.பி., கேள்வி

சென்னை, ஜூலை 30- கேரள அரசு மதிய உணவு திட்டத்தை செயல்படுத்துவது போன்று ஏன் சென்னை மாநகராட்சி செயல்படுத்தக்கூடாது? என்று மத்திய அரசின் சென்னை மாவட்ட ஒருங்கி ணைப்புக்குழுத் தலைவர் தயாநிதிமாறன் கேள்வி எழுப்பியுள்ளார். மத்திய அரசின், சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் முதல் ஆய்வுக் கூட்டம் வியாழ னன்று (ஜூலை 30) சென்னை மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் காணொளி காட்சி வாயி லாக நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் தயாநிதி மாறன் எம்.பி,  மாவட்ட வருவாய் அலுவலர் காளிதாஸ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழச்சி தங்க பாண்டியன், கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய தயாநிதி மாறன், இந்த கூட்டத்தில் திமுக,  அதிமுகவை சேர்ந்த 12 சட்டமன்ற உறுப்பி னர்கள், 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

சென்னையில் மத்திய அரசு செயல்படுத்தும் சென்னை மெட்ரோ ரயில், ரயில்வே, ஸ்மார்ட் சிட்டி, ஸ்வச்  பாரத் உள்ளிட்ட திட்டங்கள் பற்றி விவா திக்கப்பட்டது. இத்திட்டத்திற்கான பணிகள்  குறித்து 10 நாள்களுக்குள் எழுத்துப்பூர்வ அறிக்கையை வழங்குவதாக மாநகராட்சி யும், மாவட்ட நிர்வாகமும் தெரிவித்துள்ளன என்றார்.   சென்னை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு அதிக அளவில் செலவிட்டு உள்ளதாக கூறினார்கள்.  ஆனால், இன்னும்  சென்னை சுமாரான சிட்டியாகவே உள்ளது.  அதேபோல நிறைய திட்டங்கள் அறிவித் துள்ளனர். அவை அனைத்துமே ஆரம்ப நிலை யில்தான் இருக்கிறது என்று அவர் அதி ருப்தி தெரிவித்தார். கொரோனா காலத்தில் கேரளா மாநில அரசு, மதிய உணவு திட்டத்தில் உள்ள குழந்தைகளுக்கு வீடு தேடி சென்று பொருட்  களை கொடுப்பதைபோல, ஏன் சென்னை  மாநகராட்சி செய்யவில்லை என்று கேள்வி  எழுப்பினோம்? மகளிர் மேம்பாட்டுத் திட்டத் திற்கு என்னென்ன செய்திருக்கிறீர்கள்? உணவு பாதுகாப்பு துறை, மாற்றுத் திறனாளி களுக்கான திட்டம், குழந்தைகள் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் என் னென்ன செய்யப்பட்டுள்ளது? என்பன போன்ற  கேள்விகளை எழுப்பி உள்ளோம் என்றும் அவர் கூறினார்.