tamilnadu

கொரோனா மரணங்கள் மறைக்கப்படுவது ஏன்?: ஸ்டாலின்

சென்னை:
நெல்லை மாவட்டத்தில் கொரோனா மரணங்கள் மறைக் கப்படுவது ஏன்? என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், கொரோனாவால் நெல்லை மாவட்டத்தில் 182 பேர் இறந்ததாக அரசு கூறிவரும் நிலையில், தகவல் உரிமைச் சட் டத்தில் பெறப்பட்ட தகவல்படி 285 பேர் இறந்துள்ளதாக தெரியவந்துள்ளதாக பதிவிட்டுள்ளார்.நெல்லையில் 103 கொரோனா மரணங்கள் மறைக்கப்பட்டதாக கூறியுள்ள ஸ்டாலின், சென்னையில் மறைக்கப்பட்ட மரணங்களுக்கே இன்னும் விளக்கம் வரவில்லை என தெரிவித்துள்ளார். மக்கள் உயிரோடு விளையாடாமல், உண்மை நிலையை மொத்தமாக வெளியிட வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

;